5. அருள்மிகு சிவலோகநாதர் கோயில்
இறைவன் சிவலோகநாதர்
இறைவி திருவெண்ணீற்று உமையம்மை
தீர்த்தம் பஞ்சாட்சர தீர்த்தம்
தல விருட்சம் மா மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருநல்லூர்ப்பெருமணம், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'ஆச்சாள்புரம்' என்று அழைக்கப்படுகிறது. சிதம்பரத்துக்கு அருகில் உள்ள கொள்ளிடம் இரயில் நிலையத்திலிருந்து 6 கி. மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Achalpuram Gopuramதிருஞானசம்பந்தர் முக்தி பெற்ற தலம். நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகளான மங்கை நல்லாளை சம்பந்தருக்கு மணம் பேசி முடித்தனர். ஆச்சாள்புரம் கோயிலில் நடைபெற்ற திருமணச் சடங்குகளை திருநீலநக்க நாயனார் முன்னின்று நடத்தினார். திருமணத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், அவரது துணைவியாரும் கலந்துக் கொண்டனர்.

Achalpuram Amman Achalpuram Moolavarதிருமணம் முடிந்தவுடன் அக்கினியை வலம் வரும்போது சிவபெருமான் அசரீரியாகத் தோன்றி, 'அனைவரும் ஜோதியில் கலந்து முக்தி பெருக' என்று அருள்புரிந்தார். அப்போது அங்கு ஒரு சோதி தோன்றிட, சம்பந்தர் 'காதலாகி கசிந்து' என்று தொடங்கும் 'நமசிவாயப் பதிகம்' பாடி, திருமணத்திற்கு வந்திருந்தவர்களுடன் சோதியில் கலந்து மறைந்தார். சம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது.

Achalpuramமூலவர் 'சிவலோகநாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'திருவெண்ணீற்று உமையம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள். சம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அம்பிகையே நேரில் வந்து திருநீறு (வெண்ணீறு) கொடுத்தமையால் இப்பெயர் பெற்றார்.

காகபுசுண்ட முனிவர் முக்தி பெற்ற தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com